என்ன சொல்வது திருமண வாழ்வில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு வாழ்ந்து வந்தால் அக்குடும்பம் நிச்சயமாக ஒரு பல்கலைக்கழகம் தான். இல்லை என்றால் அது புரியாத புதிர்தான்.
Wednesday, 16 May 2018
தனி மனித சுய சிந்தனை
இப்போதைய நாட்களில் வெப்பம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இரவில் தூங்குவது என்பது கேள்வி க்குறியாகவே இருக்கிறது. இந்த நேரத்தில்தான் ஒவ்வொருத்தரும் தன் சிந்தனையை வளர்க்க வேண்டும். எப்படியென்றால் வெப்பம் தணிய வேண்டும். எப்படி தணியும்"நீராதாரம்" வேண்டும். என்ன செய்யலாம். யோசித்துப் பார்த்தால் நமக்குள்ளேயே ஒரு தீர்வைக் காணலாம். அதுதான்இயற்கை நமக்களித்த பொக்கிஷம் " மழை" அது தரும் நீரை நாம் அப்படியே நமக்குரிய தாக மாற்றவேண்டும். அதற்கு அவன் என்னசெய்யலாம் என்றால் முதலில் தன்னுடைய வீட்டுப் பகுதியில் ஒரு மூலைப் பகுதியை தேர்ந்தெடுத்து அது தோட்டப் பகுதியாக இருந்தால் ஒரு பத்து அடி நீளம் உள்ள குழாயில் துளையிட்டு அதை அப்படியே மண்ணில் நன்கு இரக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்படுமேயானால் மழை நீரானது பூமிக்கு அடியில் சென்று நம் வீடு குளிர்ச்சி பெறும்.முதலில் நாம் இதைச் செய்வோம் நண்பர்களே.
Wednesday, 21 February 2018
மனதின் ஆதங்கம்
ஒரு மனைவி தன் அலுவலக வேலைகளை எல்லாம் முடித்து பின்னர் தன் வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ள வேலைகளை எல்லாம் முடித்து அதன் பின்னர் சற்று நேரம் தன் கணவரிடம் சிறிது நேரம் அன்றைய நாளின் நிகழ்வு களை பரிமாறிக் கொள்ள நினைக்கும் தருணத்தில் அதை கணவன் புறக்கணித்து சென்றால் அந்தபெண்ணின் மனம் படும் பாடு பரிதாபத்துக்குரிய தாகும் அல்லவா! இது தான் இன்றைய பெண்களின் நிலை. இதை கணவன் மார்கள் சற்று புரிந்து தங்கள் செய்கையை மாற்றிக் கொள்ள முற்பட்டால் அதுவும் மனித நேயம் தான் அல்லவா.
Tuesday, 20 February 2018
சிந்தனை துளிகள்
ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் போது நம்மை விட ப்பெ ரியவகளின்ஆலோசனை பெற்று செய்தோமானால் அச்செயல் மிக சரியானதாக அமையும்.
Subscribe to:
Posts (Atom)