Wednesday, 21 February 2018

மனதின் ஆதங்கம்

ஒரு மனைவி தன் அலுவலக வேலைகளை எல்லாம் முடித்து பின்னர் தன் வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ள வேலைகளை எல்லாம் முடித்து அதன் பின்னர் சற்று நேரம் தன் கணவரிடம் சிறிது நேரம் அன்றைய நாளின் நிகழ்வு களை பரிமாறிக் கொள்ள நினைக்கும் தருணத்தில் அதை கணவன் புறக்கணித்து சென்றால் அந்தபெண்ணின் மனம் படும் பாடு பரிதாபத்துக்குரிய தாகும் அல்லவா! இது தான் இன்றைய பெண்களின் நிலை. இதை கணவன் மார்கள் சற்று புரிந்து தங்கள் செய்கையை மாற்றிக் கொள்ள முற்பட்டால் அதுவும் மனித நேயம் தான் அல்லவா.

Tuesday, 20 February 2018

சிந்தனை துளிகள்

ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் போது நம்மை விட ப்பெ ரியவகளின்ஆலோசனை பெற்று செய்தோமானால் அச்செயல் மிக சரியானதாக அமையும்.